பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காபூலிலிருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உதவியவர்களுக்கு நன்றி: ஜெய்சங்கர்

காபூலிலிருந்து இந்தியத் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை இந்தியாவுக்கு வெளியேற்ற உதவிய அனைவருக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :17 ஆகஸ்ட் 2021, 1:34 pm

DIN


காபூலிலிருந்து இந்தியத் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை இந்தியாவுக்கு வெளியேற்ற உதவிய அனைவருக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, சர்வதேச நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் குடிமக்களைத் திரும்ப அழைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தினர். இந்தியாவும் தங்களது அதிகாரிகளை உடனடியாகத் திரும்ப அழைக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, இந்திய விமானப் படையின் சி-17 விமானம் மூலம் காபூலிலிருந்து 120 இந்திய அதிகாரிகள் திரும்ப அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வந்திறங்கினர்.

இந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர் ட்விட்டர் பதிவு: 

"இந்தியத் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை காபூலிலிருந்து இந்தியாவுக்கு வெளியேற்றுவது என்பது கடினமான சிக்கல் நிறைந்த பணி. இதற்கு ஒத்துழைப்பு தந்து அதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.