இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

'வந்தே மாதரம்' என முழங்கிய இந்தியர்கள்: ஆப்கனிலிருந்து திரும்பிய நெகிழ்ச்சி

ஆப்கானிஸ்தானிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் சொந்தநாடு வந்தடைந்த மகிழ்ச்சியில் வந்தே மாதரம் என முழங்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

News image
'வந்தே மாதரம்' என முழங்கிய இந்தியர்கள்: ஆப்கனிலிருந்து திரும்பிய நெகிழ்ச்சி
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:35 am

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் சொந்தநாடு வந்தடைந்த மகிழ்ச்சியில் 'வந்தே மாதரம்' என முழங்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானை அமெரிக்கப் படைகளிடமிருந்து தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டிலுள்ள மக்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் செல்ல முயன்று வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டினரை அந்தந்த நாடுகள் மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சிக்கியிருந்த தூதரக அதிகாரிகள் உள்பட 120 இந்தியர்கள் விமானப்படையின் மூலம் குஜராத் அழைத்து வரப்பட்டனர். 

விமான நிலையத்திலிருந்து பேருந்து மூலம் அழைத்துவரப்பட்டபோது சொந்த நாடு திரும்பிய நெகிழ்ச்சியில் 'வந்தே மாதரம்', 'பாரத் மாதாகி ஜே' என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

அவசர நிலை கருதி ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மின்னணு விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.