புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாட்டில் 154 நாள்களுக்குப் பிறகு குறைந்த கரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 154 நாள்களுக்குப் பிறகு குறைந்த கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,166 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
நாட்டில் 154 நாள்களுக்குப் பிறகு குறைந்த கரோனா பாதிப்பு
Updated On :17 ஆகஸ்ட் 2021, 6:58 am

DIN


நாட்டில் கடந்த 154 நாள்களுக்குப் பிறகு குறைந்த கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,166 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,22,50,679 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.51 சதவீதமாக உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து மிக அதிகபட்சமாகும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்திருந்த 437 பேர் பலியாகினர். இதனுடன் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 4,32,079 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 3,69,846 ஆக உள்ளது. இது கடந்த 146 நாள்களுக்குப் பின் பதிவாகும் குறைந்த எண்ணிக்கையாகும். இது மொத்த பாதிப்பில் 1.15 சதவீதமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.