
சுனந்தா புஷ்கர் மரண வழக்கின் காரணமாக ஏழரை ஆண்டு சித்திரவதை அனுபவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வேதனை தெரிவித்துள்ளார்.
சுனந்தா புஷ்கர் மரண வழக்கிலிருந்து அவரது கணவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூரை தில்லி உயர் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி, தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் சுனந்தா புஷ்கர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும் கொடுமைப்படுத்தியதாகவும் சசி தரூர் மீது தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்து நடைபெற்ற வழக்கில் சசி தரூருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், அவரை வழக்கிலிருந்து விடுவித்தது.
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சசி தரூர், "மிகவும் நன்றி நீதிபதி அவர்களே. கடந்த ஏழரை ஆண்டுகள், பெரும் சித்தரவதைக்கு உள்ளானேன். இத்தீர்ப்பை வரவேற்கிறேன்" என்றார். சசி தரூர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்படுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.