எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

50 இல்லாவிட்டாலும் 33 வரவேற்கத்தக்கது! மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாயாவதி ஆதரவு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாயாவதி வரவேற்பு...

News image

மாயாவதி - IANS

Updated On :15 ஏப்ரல் 2026, 11:14 am IST

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

வருகிற ஏப். 16 முதல் 18 வரை நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. 2029-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்துவதற்குமான மசோதாவை கொண்டுவரும் பொருட்டு இந்த சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த மசோதாவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

லக்னெளவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களுக்குச் சமத்துவத்தையும் சுயமரியாதையையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், 'இந்து சட்ட மசோதா'வின் வாயிலாக அவர்களுக்கு வலுவான சட்ட உரிமைகளையும் வழங்க டாக்டர் அம்பேத்கர் முயன்றார்.

அப்போதைய காங்கிரஸ் அரசு, குறுகிய சாதிய மனப்பான்மையால் அந்த மசோதாவை ஏற்க மறுத்தது. பின்னர், அதனைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து நிறைவேற்றியது.

இதன் விளைவாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) இடஒதுக்கீடு வழங்கப்படாததற்கும் பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், மேம்பாட்டிற்காக எவ்வித உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படாததற்கும் எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.

அந்த வகையில் மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை எங்கள் கட்சி வரவேற்கிறது. இருப்பினும் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையே எங்கள் கட்சி எப்போதும் ஆதரித்து வருகிறது. அதேவேளையில், 33 சதவீத இடஒதுக்கீட்டையும் எங்கள் கட்சி வரவேற்கிறது. இது ஒரு சிறிய எண்ணிக்கையாக இருக்கலாம். ஆயினும் இது ஒரு தொடக்கம், இதை நாங்கள் வரவேற்கிறோம். 50 இல்லாவிட்டாலும், 33 போதுமானது வரவேற்கத்தக்கது" என்று கூறினார்.

Summary

BSP Leader Mayawati backs Women's reservation bill

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.