கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆப்கனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கே முன்னுரிமை: அமைச்சர் ஜெய்சங்கர்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :19 ஆகஸ்ட் 2021, 12:19 pm

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

இதுகுறித்து ஐ.நா. மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார். 

தில்லியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப வேண்டும். அதில் மட்டுமே எங்களின் கவனம் உள்ளது. 

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் பேசும்போதும் இதுதான் வலியுறுத்தப்பட்டது. 

மற்றவர்களைப் போல நாங்களும் ஆப்கானிஸ்தானின் நிலையை உன்னிப்புடன் கவனித்து வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் இந்தியா கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. இது ஆப்கானிஸ்தான் மக்களுடன் நம்முடைய வரலாற்று உறவைப் பிரதிபலிக்கிறது. 

ஆப்கானிய மக்களுடனான உறவு வெளிப்படையாகத் தொடரும் என்றே நான் நினைக்கிறேன். அது தலிபான்களின் நடவடிக்கையைப் பொருத்தது. காபூலில் நிலைமை என்னவென்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார். 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்கு பாகிஸ்தான் காரணமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.