கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தலிபான்கள் கொன்றாலும் ஆப்கனை விட்டு வெளியேற மாட்டேன்: ஹிந்து கோயில் பூசாரி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹிந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருபவர் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற மறுத்துள்ளார்.   

News image

தலிபான்கள் கொன்றாலும் ஆப்கனை விட்டு வெளியேற மாட்டேன்: ஹிந்து கோயில் பூசாரி

Updated On :18 ஆகஸ்ட் 2021, 12:02 pm

DIN

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹிந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருபவர் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற மறுத்துள்ளார்.   

தலிபான்கள் சுட்டுக் கொன்றாலும் கோயிலில் சேவையாற்றுவதை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கப் படைகளுடன் போரிட்டு ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

இதனால் ஏராளமான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள குடிமக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் தலைநகரான காபூலில் உள்ள ரத்தன் நாத் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வரும் ராஜேஷ் குமார் என்பவர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்தியா செல்ல போதிய ஏற்பாடுகள் செய்து கொடுத்தாலும், முன்னோர்கள் சேவையாற்றிய கோயிலை விட்டு வெளியேறமாட்டேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார். 

சில ஹிந்து மதத்தினர் ஆப்கனை விட்டு வெளியேற அழைத்தபோது அவர் இது தொடர்பாக பேசியதாவது, ''பலர் ஆப்கனை விட்டு வெளியேறுவதற்கான பயணம் மற்றும் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறுகின்றனர்.

ஆனால் எனது முன்னோர்கள் ரத்தன் நாத் கோயிலில் நூறு  ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியுள்ளனர். நான் அதை விட்டுச்செல்ல முடியாது. தலிபான்கள் கொன்றாலும் எனது சேவையிலிருந்து பின்வாங்க மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.