பெங்களூரு: நாட்டிலேயே கரோனாவுக்கு அதிக மரணங்கள் நிகழ்ந்த மாவட்டங்களின் பட்டியலில், இரண்டாவது இடத்திலிருந்த மும்பையை பெங்களூரு ஊரகப் பகுதி பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
நாட்டிலேயே கரோனா பலி எண்ணிக்கையில் புணே தொடர்ந்து முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தன. இந்த நிலையில், தற்போது பெங்களூரு ஊரகப் பகுதி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நிலவரப்படி, பெங்களூருவில் கரோனாவுக்கு 15,953 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் கரோனா பலி எண்ணிக்கை 15,930 ஆகவும், புணேவில் 18,779 ஆகவும் உள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக இருந்தபோதும், அங்கு புணே, மும்பை மாவட்டங்களில் பாதிப்பு பரவலாக இருந்தது. ஆனால், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்தபோது, பெங்களூருவில் மட்டுமே பாதிப்பின் அளவு 43 சதவீதத்துக்கும் மேல் இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 36,571 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 3.63 லட்சமாகக் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனமழையால் தத்தளிக்கும் கேரளம்: 15 ஆன பலி, 7 பேர் மாயம்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

முக்கிய பொறியியல் படிப்புகளுக்கு மீண்டும் வாழ்வு! 100% வேலை வாய்ப்பு

மகாராஷ்டிர அரசின் அடக்குமுறையையாவது முதல்வர் விஜய் கண்டிப்பாரா ? டிடிவி தினகரன் கேள்வி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



