லக்னௌ விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னௌ விமான நிலையத்தில் சவுதியில் இருந்து ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததோடு தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
லக்னௌ விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
லக்னௌ விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னௌ விமான நிலையத்தில் சவுதியில் இருந்து ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததோடு தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

நேற்று (வியாழக்கிழமை) அன்று சவுதியின் ரியாத்திலிருந்து லக்னௌ விமான நிலையம் வந்த இருவரை பரிசோதனை செய்த போது 699.89 கிராம் எடையுள்ள 3 தங்கக்கட்டிகளை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கபட்டது.

பின் சுங்கத்துறை அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 34.71 லட்சம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com