போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மும்பையில் கனமழை: நீர்தேக்கத் தொட்டி உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்

மும்பையில் பெய்த கனமழையால் நீர்தேக்கத் தொட்டி உடைந்ததில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

News image
மும்பையில் கனமழை: நீர்தேக்கத் தொட்டி உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்
Updated On :21 ஆகஸ்ட் 2021, 8:56 am

DIN

மும்பையில் பெய்த கனமழையால் நீர்தேக்கத் தொட்டி உடைந்ததில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் இன்று பெய்த கனமழையால் அப்பகுதியில் இருந்த நீர்த்தேக்கத் தொட்டி உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது.

இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி மக்களின் உடைமைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ள பாதிப்பால் அப்பகுதியில் மின்சார வசதி பாதிக்கப்பட்டது.

வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மீட்புப் படையினர் வெள்ளநீரால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.