இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தால் ஏரியில் மிதக்கும் ஏடிஎம்..அசத்தும் எஸ்பிஐ

ஜம்மு காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் மிதக்கும் ஏடிஎம் வசதியை எஸ்பிஐ தொடங்கியுள்ளது.

News image
மிதக்கும் ஏடிஎம்
Updated On :22 ஆகஸ்ட் 2021, 7:25 am

DIN

நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, ஜம்மு காஷ்மீர் தால் ஏரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிதக்கும் ஏடிஎம் வசதியை தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி, எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா, இந்த ஏடிஎம் வசதியை தொடங்கி வைத்தார்.

இது ஸ்ரீநகருக்கு மேலும் அழகு சேர்க்கும் என எஸ்பிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோரின் வசதிக்கு ஏற்ப ஸ்ரீநகர் தால் ஏரியில் உள்ள படகில் ஏடிஎம் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் ஏடிஎம்-இன் மூலம் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளது.

தால் ஏரியில் மதிக்கும் காய்கறி சந்தை, தபால் நிலையம் ஆகியவையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.