மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வங்கியை கொள்ளையடிக்க முயற்சி: துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி

அசாமில் கொள்ளையடிக்க முயற்சித்ததாகக் கூறி காவல்துறையினர் மூவரை சுட்டு கொன்றுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஆகஸ்ட் 2021, 10:40 am

DIN

அசாமில் கொள்ளையடிக்க முயற்சித்ததாகக் கூறி காவல்துறையினர் மூவரை சுட்டு கொன்றுள்ளனர்.

அசாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்க சிலர் முயன்றுள்ளனர். அந்த முயற்சியை தடுத்து நிறுத்திய அம்மாநில காவல்துறையினர் மூவரை சுட்டு கொன்றுள்ளனர்.

இதுகுறித்து அசாம் காவல்துறை இயக்குநர் பாஸ்கர் ஜோதி மஹந்தா கூறுகையில், "சனிக்கிழமை, போட்கான் கிராமம் அருகே செங்மாரியில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றதையடுத்து காவலர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், காவல்துறையினர் நடத்திய பதில் துப்பாக்குச்சூட்டில் மூன்று கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர். மற்ற மூவர் தப்பித்துவிட்டனர். வாகனங்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன" என்றார்.

கொள்ளையர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தப்பி சென்ற மற்ற மூன்று கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக காவல்துறையினற் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவம் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், "குற்றங்கள் நடைபெறாக மாநிலமாக அசாம் மாற்றப்படும். பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை ஆகியவை நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.