பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புரி ஜெகந்நாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி

சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பின், ஒடிசா மாநிலம் புரியில் அமைந்துள்ள ஜெகந்நாதர் கோயிலில், பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image

புரி ஜெகந்நாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி

Updated On :23 ஆகஸ்ட் 2021, 7:34 am

IANS


புவனேஸ்வர்: சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பின், ஒடிசா மாநிலம் புரியில் அமைந்துள்ள ஜெகந்நாதர் கோயிலில், பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை வார நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஜெகந்நாதர் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சனி மற்றும் ஞாயிறுகளில் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிர்வாகி கிருஷண் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரங்களில், புரி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள், புரி ஜெகந்நாதரை தரிசித்தனர். இன்று முதல், எந்தப் பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.