புரி ஜெகந்நாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி

சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பின், ஒடிசா மாநிலம் புரியில் அமைந்துள்ள ஜெகந்நாதர் கோயிலில், பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புரி ஜெகந்நாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி
புரி ஜெகந்நாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி
Published on
Updated on
1 min read


புவனேஸ்வர்: சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பின், ஒடிசா மாநிலம் புரியில் அமைந்துள்ள ஜெகந்நாதர் கோயிலில், பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை வார நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஜெகந்நாதர் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சனி மற்றும் ஞாயிறுகளில் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிர்வாகி கிருஷண் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரங்களில், புரி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள், புரி ஜெகந்நாதரை தரிசித்தனர். இன்று முதல், எந்தப் பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com