மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நாட்டின் சொத்துகளை விற்கிறது பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

நாட்டின் சொத்துகளை பிரதமர் மோடி விற்றுவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
Updated On :24 ஆகஸ்ட் 2021, 12:27 pm

DIN

நாட்டின் சொத்துகளை பிரதமர் மோடி விற்றுவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, அரசின் சொத்துகளை குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை தனியாருக்கு விற்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுச்சொத்துகளை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துகள் அனைத்தையும் பாஜக அரசு விற்று வருகிறது என்று விமர்சித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.