கேரளத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிப்பு
கேரளத்தில் புதிதாக 31,445 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளத்தில் புதிதாக 31,445 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31,445 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 19.03 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: மருத்துவ நிபுணர்
மேலும் 20,271 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 215 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 36,92,628 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 19,972 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | ரஷியாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 809 பேர் கரோனாவுக்குப் பலி
கேரளத்தில் நாளுக்குநாள் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...