கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மண்சரிவால் உருண்டு விழுந்த பாறை : எல்லை பாதுகாப்புப் படை வீரர் பலி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மொஹல்  பகுதியில் நேற்று (ஆக-25) அருகே இருந்த மலையிலிருந்து உருண்டு வந்த பாறை மோதியதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News image
மண்சரிவால் உருண்டு விழுந்த பாறை : எல்லை பாதுகாப்புப் படை வீரர் பலி
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:42 am

DIN

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மொஹல்  பகுதியில் நேற்று (ஆக-25) அருகே இருந்த மலையிலிருந்து உருண்டு வந்த பாறை மோதியதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த பாதுகாப்புப் படை வீரரான நிசார் உசைன் விடுமுறையை கழிக்க சொந்த ஊர் திரும்பியதாகவும் அங்கு தோக் பகுதியில் அவரும் அவருடைய சகோதரரும் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மலையில் இருந்து உருண்டு வந்த பாறை மோதியதில் நிசார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவருடைய சகோதரர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.