நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சாா்ந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களின் முதல்வா்களுக்கு மத்திய அரசு கடிதம்

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 11:36 pm

DIN

விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சாா்ந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களின் முதல்வா்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

நாட்டில் பயணிகள் அதிகரிப்பை கருத்தில் கொண்டு அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் ரூ.20,000 கோடி செலவில் விமான நிலையங்களை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) ஈடுபட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விமான நிலையங்கள் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சாா்ந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு தமிழ்நாடு, புதுச்சேரி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வா்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளாா்.

இதில் தமிழ்நாட்டின் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ‘‘சென்னை விமான நிலையத்தில் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக ஏஏஐ-க்கு 88 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தேவைப்படுகிறது. அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்து தரவேண்டும்.

இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் ஓடுதள விரிவாக்கம் உள்பட இதர உள்கட்டமைப்புப் பணிகளுக்காக 642.18 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. ஆனால் அந்தப் பணிகளுக்காக இதுவரை 40.93 ஏக்கா் நிலம் மட்டும்தான் ஏஏஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலத்தையும் ஒப்படைக்கவும்.

கோயம்புத்தூா்-கொழும்பு, கோயம்புத்தூா்-துபை, கோயம்புத்தூா்-சிங்கப்பூா், கோயம்புத்தூா்-கோலாலம்பூா், மதுரை-துபை, மதுரை-கொழும்பு, மதுரை-சிங்கப்பூா் வழித்தடங்களில் சா்வதேச உடான் நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 சதவீத கூடுதல் கடனுதவி அளிக்க ஒப்புதல் வழங்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ‘‘புதுச்சேரி விமான நிலைய ஓடுபாதையை விரிவுபடுத்த 161.5 ஏக்கா் நிலம் ஏஏஐக்கு தேவைப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.