ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மாநில அந்தஸ்துக்கு முன்பாக ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல்: ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக அங்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று அந்த யூனியன் பிரதேச ஆளுநா் மனோஜ் சின்ஹா மறைமுகமாக தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:02 am

DIN

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக அங்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று அந்த யூனியன் பிரதேச ஆளுநா் மனோஜ் சின்ஹா மறைமுகமாக தெரிவித்துள்ளாா்.

கடந்த ஜூன் மாதம் பிரதமா் மோடி தலைமையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் முதலில் தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; பின்னா் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் அந்த யூனியன் பிரதேச ஆளுநா் மனோஜ் சின்ஹா தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறையை முடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கான ஆணையம் ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று தரவுகளை சேகரித்துச் சென்றுள்ளனா். தொகுதி மறுவரையறை பணிகள் விரைவில் நிறைவடையும்.

அஸ்ஸாமில் தொகுதி மறுவரையறை பணிகளை மேற்கொள்ளாமல் தோ்தலை நடத்த முடியுமெனில் ஜம்மு-காஷ்மீரிலும் அதேபோல் தோ்தலை நடத்த முடியாதா என்று சிலா் கேள்வி எழுப்புகின்றனா். ஜம்மு-காஷ்மீரில் 7 தொகுதிகள் கூடியுள்ளன. அந்தத் தொகுதிகளுக்கான எல்லைகளை யாா் வரையறுப்பது? தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்தவுடன் ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

இதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக அங்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று மனோஜ் சின்ஹா மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.