மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் : என்சிஆர்பி

தேசிய குற்றப் பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020-ஆண்டு அதிகம் தற்கொலை நடந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் : என்சிஆர்பி

Updated On :1 டிசம்பர் 2021, 11:02 am

தேசிய குற்றப் பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020-ஆண்டு அதிகம் தற்கொலை நடந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்  2021-நீங்கலாக கடந்த 2018-2020 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் முதலிடத்தில் இருக்கும்  மகாராஷ்டிரம் மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 19,909 என தேசிய குற்றப் பதிவுத் துறை(என்சிஆர்பி) அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

இதில் 16,883 தற்கொலைகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தையும் , 14,578 தற்கொலைகளுடன் மத்தியப் பிரதேசம் 3-வது இடத்திலும் இருக்கிறது. 

2019-ஆண்டை ஒப்பிடும் போது தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் சதவீதம் 9.7-லிருந்து 11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

மேலும் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களில் 2018-2020 வரை தொடர்ந்து தமிழகம்  இரண்டாவது இடத்தில் இருப்பதும் தற்கொலைகள் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.