ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓமைக்ரான் கரோனா: விதிகளை ஆய்வு செய்யும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

பழைய கரோனா வகைகளை காட்டிலும் ஓமைக்ரான் ஆபத்தானதா என்பதை அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :2 டிசம்பர் 2021, 6:08 am

DIN

சர்வதேச விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில, யூனியன் பிரதேச அலுவலர்களிடம் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் குறிப்பாக ஓமைக்ரான் கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

முன்னதாக, சர்வதேச விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, மத்திய அரசை காட்டிலும் மகாராஷ்டிரா அரசு, கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களில் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஓமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஏழு நாடுகளுக்கு வி்மான நிலையங்களிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மூன்று முறை தங்களின் சொந்த செலவில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மற்றவர்கள், கரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்றும் 14 நாள்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள், கரோனா பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ள விதிகளை பின்பற்றுமாறு மகாராஷ்டிர அரசிடம் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.