லண்டன்: பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று பேசுகையில், புதிதாக பரவி வரும் ஒமைக்ரான் பாதிப்பு, நாட்டில் சமூகப் பரவலாகிவிட்டது என்று கூறினார்.
தென்னாப்ரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை பிரிட்டனில் 336 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தற்போதைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பிரிட்டனில், 261 நோயாளிகள் இங்கிலாந்திலும், 71 பேர் ஸ்காட்லாந்திலும், 4 பேர் வேல்ஸிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை 336 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்புகளில் பெரும்பாலானோருக்கு வெளிநாட்டுப் பயணங்களுடனோ, வெளிநாட்டுப் பயணிகளுடனோ தொடர்பில்லை. எனவே, ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவிட்டது.
பிரிட்டனின் அபாய நாடுகளின் பட்டியலில் நைஜீரியாவும் சேர்ந்துவிட்டது. அங்கிருந்து வரும் பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


