பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஒமைக்ரான் அச்சம்: வெளிநாட்டிலிருந்து திரும்பிய 100 பேரை தேடுகிறது மும்பை

ஒமைக்ரான் அச்சம் காரணமாக, வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த 295 பேரில், 109 பேர் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக, கல்யாண் டோம்பிவாலி நகராட்சித் தலைவர் விஜய் சூர்யவன்ஷி தெரி

News image

ஒமைக்ரான் அச்சம்: வெளிநாட்டிலிருந்து திரும்பிய 100 பேரை தேடுகிறது மும்பை

Updated On :7 டிசம்பர் 2021, 12:09 pm IST


தாணே: ஒமைக்ரான் அச்சம் காரணமாக, வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த 295 பேரில், 109 பேர் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக, கல்யாண் டோம்பிவாலி நகராட்சித் தலைவர் விஜய் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளிநாடுகளிலிருந்து தாணே மாவட்டத்துக்குள் நுழைந்த 100 பேர் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

சிலரது செல்லிடப்பேசிகள் அணைத்துவைக்கப்பட்டுள்ளது. சிலர் கொடுத்த முகவரியில் வீடுகள் பூட்டப்பட்டுள்ளன.

அபாய நாடுகள் பட்டியலிலிருக்கும் நாடுகளிலிருந்து வருவோர், 7 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், 8வது நாள் மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், கரோனா இல்லை என்று முடிவு வந்தாலும், மீண்டும்ட 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதுபோல திருமணங்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

டோம்பிவாலி பகுதியில் அண்மையில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.