பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒமைக்ரான்: மகாராஷ்டிரத்தின் முதல் நபர் குணமடைந்து வீடு திரும்பினார்

மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நபருக்கு வியாழக்கிழமை தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்யான்-டோம்பிவிலி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2021, 3:14 pm

DIN


மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நபருக்கு வியாழக்கிழமை தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்யான்-டோம்பிவிலி மாநகராட்சி ஆணையர் விஜய் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியது:

"மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட முதல் நபரான 33 வயது பொறியாளருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 7 நாள்களுக்கு வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்."

இவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை கடந்த சனிக்கிழமை அறிவித்தது. மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர். நாட்டின் 4-வது நபர். இவர் தென் ஆப்பிரிக்காவின் கேப்டௌனிலிருந்து துபை மற்றும் தில்லி வழியாக நவம்பர் 24-ம் தேதி மும்பை வந்தடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.