மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நபருக்கு வியாழக்கிழமை தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்யான்-டோம்பிவிலி மாநகராட்சி ஆணையர் விஜய் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியது:
"மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட முதல் நபரான 33 வயது பொறியாளருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 7 நாள்களுக்கு வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்."
இதையும் படிக்க | 57 நாடுகளில் ஒமைக்ரான் பரவல்: உலக சுகாதார அமைப்பு தகவல்
இவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை கடந்த சனிக்கிழமை அறிவித்தது. மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர். நாட்டின் 4-வது நபர். இவர் தென் ஆப்பிரிக்காவின் கேப்டௌனிலிருந்து துபை மற்றும் தில்லி வழியாக நவம்பர் 24-ம் தேதி மும்பை வந்தடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


