அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

விமானப் படை தளபதி தலைமையில் விசாரணை: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராஜ்நாத் விளக்கம்

குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

News image

விமானப் படை தளபதி தலைமையில் விசாரணை: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராஜ்நாத் விளக்கம்

Updated On :9 டிசம்பர் 2021, 6:11 pm IST


புது தில்லி: குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, விமானப் படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில்,  முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் பலியாகினர்.

நாடாளுமன்றத்தின் மக்களவை இன்று கூடியதும், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா  இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து தெரிவித்தார். 

Story image

பிறகு, ஹெலிகாப்டர் விபத்து குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர் நேற்று குன்னூர் அருகே விழுந்து விபத்துக்குள்ளாது. இதில், கேப்டன் வருண் சிங் தவிர மற்ற 13 பேர் பலியாகினர். வருண் சிங் உயிர்காக்கும் கருவிகளின் உதவியோடு வெலிங்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உயரிய சிகிச்சை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி உயிரிழந்தார் என்பதை துக்கத்துடன் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் பலியான விபின் ராவத்துக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.  இந்த விபத்து குறித்து விமானப் படை தளபதி தலைமையில்  விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

பிறகு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தனது இறுதி அஞ்சலியை செலுத்தும் விதமாகப் பேசினார்.  அவையில் விபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மக்களவை உறுப்பினர்கள் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், இந்த துக்ககரமான செய்தியை தெரிவித்தார். பிறகு அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.