பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் 

மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 2:50 pm

DIN

மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தீநுண்மி தொற்று தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், சீனா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. வழக்கமான கரோனா தொற்றைக் காட்டிலும் அதி தீவிரமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் கருதப்படுகிறது ஒமைக்ரான் தீநுண்மி. இந்தியாவில் முதன்முறையாக உருமாறிய ‘ஒமைக்ரான்’ - கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட இருவா் கா்நாடகத்தில் கண்டறியப்பட்டனா். 

இதையடுத்து, ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன்படி மும்பையில் 3 பேருக்கும், பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சியில் 4 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் ஏற்கெனவே 25 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.