ஒமைக்ரான் கரோனா சூழலுக்கேற்ப சா்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி விதிக்கப்பட்ட வழக்கமான சா்வதேச விமான பயணிகள் சேவை, டிசம்பா் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் மேலும் 649 பேருக்கு கரோனா
ஆனால் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு தொடங்கியதால் சா்வதேச விமான பயணிகள் சேவைக்கு தடை விதிக்கப்பட்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சர்வதேச விமான சேவைகளை இயல்பாக்குவது ஒமைக்ரான் சூழ்நிலையைப் பொறுத்தது எனவும் இதுதொடர்பாக ஒமைக்ரான் சூழல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், பிற நாடுகளுடனான ஒப்பந்தத்தின்படி செயல்பாட்டில் உள்ள சா்வதேச விமான சேவை தொடா்ந்து இயங்கும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூடான், பிரான்ஸ் உள்பட 32 நாடுகளுக்கு மத்திய அரசு புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி விமான சேவை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


