தொடரும் அமளி: மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்வதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தொடரும் அமளி: மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு
Published on
Updated on
1 min read

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்வதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு புதன்கிழமை அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கோரியும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். இதையடுத்து பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com