அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் புறப்பட்டார் ராம்நாத் கோவிந்த்!

அரசுமுறைப் பயணமாக  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்கதேசம் டாக்கா புறப்பட்டார்.
அரசுமுறைப் பயணமாக  வங்கதேசம் டாக்கா புறப்பட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் டாக்கா புறப்பட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

புதுதில்லி:  அரசுமுறைப் பயணமாக  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்கதேசம் டாக்கா புறப்பட்டார்.

பாகிஸ்தானுடன் வங்கதேசம் நடத்திய போரின் 50 ஆவது வெற்றி தினம், நாடு உதயமான 50 ஆவது ஆண்டு கொண்டாட்டம் ஆகியவை டாக்கா நகரில் நாளை வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (டிச.16,17) என இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வங்கதேசம் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. 

இதையடுத்து வங்கதேச அழைப்பை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினராக இரண்டு  நாள் அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் டாக்காவிற்கு புதன்கிழமை காலை தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com