மூன்றாவது முறை முதல்வராக இதுதான் காரணம்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தின் 36 சமூக மக்களும், மாநில மக்களும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தது மட்டுமே நான் மூன்றாவது முறையாக முதல்வராக காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்
Published on
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் 36 சமூக மக்களும், மாநில மக்களும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தது மட்டுமே நான் மூன்றாவது முறையாக முதல்வராக காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

ஜெய்ப்பூரில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அசோக் கெலாட் உரையாற்றினார்.

அப்போது, மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ள நான், சமூக (சாதி) அடிப்படையில் முதல்வராகவில்லை. என்னுடைய சமூகத்தில் நான் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளேன். "36 சமூக மக்களும், ராஜஸ்தான் மாநில மக்களும் என் மீது நம்பிக்கை வைக்காமல் இருந்திருந்தால், முதல்வர் என்ற அந்தஸ்துடன் தற்போது உங்கள் முன்னால் நின்று இதைச் சொல்லும் நிலையில் இருந்திருக்க முடியாது’’ என்று அசோக் கெலாட் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com