சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

உ.பி. மாநில எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

உத்தரப்பிரதேச மாநில எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தில்லியில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :17 டிசம்பர் 2021, 6:02 am

DIN

உத்தரப்பிரதேச மாநில எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தில்லியில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குளிர்கால கூட்டத்தொடரின்போது பாஜக எம்.பி.க்களுடன் காலை சிற்றுண்டி சாப்பிடுவதை பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார். கடந்த வாரம் மத்தியப்பிரதேச மாநில எம்.பி.க்களுடன் காலை உணவு அருந்தியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று காலை, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உத்தரப்பிரதேச மாநில எம்.பி.க்களுடன் காலை உணவு அருந்தி தேர்தல் குறித்தும் பிரதமர் மோடி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உ.பி.யைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள் வரை இதில் கலந்துகொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை வருவதையொட்டி, மாநில எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கொண்ட ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.