ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!

ஈரானின் வெளியுறவு அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் செல்போன் மூலம் உரையாடியது குறித்து...

News image

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் - ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சி - (கோப்புப் படம்)

Updated On :5 மார்ச் 2026, 6:05 pm IST

ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை (மார்ச் 5) செல்போன் மூலம் உரையாடியுள்ளார். ஆனால், இருநாடுகளின் அமைச்சர்களிடையே நடைபெற்ற உரையாடல்கள் குறித்த எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனிக்கு, மத்திய அரசு இன்று இரங்கல் தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்திய அரசின் சார்பில் கையெழுத்திட்டார்.

கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போர் குறித்து, கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவிக்காததற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Minister S Jaishankar has spoken to Iranian Foreign Minister Seyyed Abbas Araqchi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.