பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெகாஸஸ் விவகாரம்: மேற்குவங்க அரசு அமைத்த விசாரணை ஆணையத்திற்கு தடை

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லோகூர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மய் பட்டாச்சார்யா ஆகியோர் கொண்ட விசாரணை ஆணையத்தை மேற்கு வங்க அரசு கடந்த மாதம் அமைத்தது.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :17 டிசம்பர் 2021, 9:02 am

DIN

பெகாஸஸ் விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. லோகூர் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை மேற்குவங்க அரசு அமைத்தது. இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இந்த ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த விவகாரத்தை விசாரணை ஆணையம் விசாரிக்காது என மேற்குவங்க அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. இருப்பினும், லோகூர் தலைமையிலான ஆணையம் விசாரணையை தொடங்கியது. இந்த சூழலில், இதை கருத்தில் கொண்ட, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் நிறுவனம் தயாரித்த பெகாஸஸ் என்ற மென்பொருளை கொண்டு பல்வேறு தரப்பினர் வேவு பார்க்கப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் உளவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூன்று பேர் கொண்ட சைபர் நிபுணர்கள் அடங்கிய விசாரணைக்குழுவை அக்டோபர் 27ஆம் தேதி அமைத்தது. "தனியுரிமை மீறலுக்கு எதிராக அனைத்து குடிமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பை அரசு காரணமாக சுட்டி காட்டுவதை நீதிமன்றம் மெளனமாக பார்த்து கொண்டிருக்காது" என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லோகூர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மய் பட்டாச்சார்யா ஆகியோர் கொண்ட விசாரணை ஆணையத்தை மேற்கு வங்க அரசு கடந்த மாதம் அமைத்தது.

பெகாஸஸ் மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்ப்பதற்கான பட்டியலில் உறுதிபடுத்தப்பட்ட 300 இந்தியர்களின் செல்போன் எண்கள் இருந்ததாக சர்வதேச நாளிதழ்கள் புலனாய்வு கட்டுரைகள் வெளியிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.