மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஒரே பள்ளியில் 18 மாணவர்களுக்கு கரோனா...மும்பையில் பரபரப்பு

கத்தாரிலிருந்து இந்தியா திரும்பிய மாணவரின் தந்தைக்கு கரோனா இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2021, 6:57 am

DIN

மகாராஷ்டிரா நேவி மும்பையில் அமைந்துள்ள பள்ளியில் மாணவர் ஒருவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 18 மாணவர்களுக்கு கரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

பள்ளியில் படித்து வரும் மாணவர் ஒருவரின் தந்தைக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. சமீபத்தில்தான், அவர் கத்தாரிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து, ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் கரோனா பரிசோனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர். தந்தைக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதியானபோதிலும், மகனுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இச்சூழலில், டிசம்பர் 13ஆம் தேதி, மகன் படிக்கும் பள்ளியில் பல மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஏழு பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, பள்ளியில் உள்ள கிட்டத்தட்ட 650 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், முன்னதாக உறுதி செய்யப்பட்ட ஏழு மாணவர்கள் உள்பட 18 பேருக்கு கோவிட் 19 இருப்பது தெரியவந்தது.

ஒரே பள்ளியில் படிக்கும் 18 மாணவர்களுக்கு கரோனா இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அங்கு மற்றவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

வெள்ளிக்கிழமை மட்டும், மகாராஷ்டிராவில் 902 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எட்டு பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.