தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

எங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன: அகிலேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் பாஜக மீது கடும் விமரிசனங்களை மேற்கொண்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2021, 9:29 am

DIN

உத்தரப் பிரதேசம் உள்பட ஏழு மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சி கடும் சவாலாக மாறியுள்ளது. பிராந்திய தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்பில், 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ராய், அகிலேஷ் யாதவின் தனிச் செயலாளர் ஜைனேந்திர யாதவ், கட்சியின் முக்கிய முக்கிய பிரமுகர் மனோஜ் யாதவ் ஆகியோரின் வீட்டில் இன்று காலை வருவான வரி சோதனை நடைபெற்றது.

வாரணாசியிலிருந்து வந்த வருமான வரித்துறையினர், கிழக்கு உத்தரப் பிரதேசம் மௌ மாவட்டத்தில் உள்ள ராயின் வீட்டில் சோதனை நடத்தினர். ராயுக்கு சொந்தமான குழுமம், கர்நாடகாவில் பல்வேறு கல்வி நிலையங்களை நடத்திவருகிறது.

இதை கடுமையாக விமரிசித்துள்ள அகிலேஷ் யாதவ், தங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதுகுறித்து இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பேசிய அவர், "சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர். 

மாலை நேரத்தில், எங்களுக்கு வரும் அழைப்புகளை யோகி ஆதித்யநாத்தே ஒட்டு கேட்கிறார். எங்களை தொடர்பு கொண்டால் நீங்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் வருவீர்கள். இந்த ரெய்டுகள், தேர்தலில் பாஜக தோற்கப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும். யோகி அரசாங்கத்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. பாஜகவால் வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தை மட்டுமே நடத்த முடியும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, எப்படி நடந்து கொண்டதே, அதே பாதையில்தான் பாஜக செயல்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவின் இத்தகைய தந்திரங்கள் அதிகரிக்கும். ற்போது, வருமான வரித்துறையினர்தான் வந்துள்ளார்கள், பின்னர், அமலாக்கத் துறையினர், சிபிஐ அலுவலர்கள் வருவார்கள். ஆனால், சமாஜ்வாதி கட்சி நின்றுவிடாது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.