காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஒமைக்ரான் தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும்: மகாராஷ்டிர அமைச்சர்

மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :22 டிசம்பர் 2021, 6:09 am

DIN

மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தற்போது வெளிநாடு செல்லாதவர்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் மட்டும் 54 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் வர்ஷா பேசுகையில், “ஒமைக்ரான் பரவலை கண்காணித்து வருகிறோம். தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும் என்றார்”.

ஏற்கனவே நாடு முழுவதும் கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.