ஜம்மு-காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள பந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே இன்று கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் லக்ஷர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையும் படிக்க- இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு
அத்துடன் பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.