மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாம் மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் 

அசாம் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

News image
Updated On :25 டிசம்பர் 2021, 3:38 pm

அசாம் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து மத்திய பிரதேசம், குஜராத், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
தற்போது இந்த மாநிலங்களைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலமான அசாமிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதன்படி, இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். 

அதேசமயம், புத்தாண்டையொட்டி டிசம்பர் 31-ஆம் தேதி இந்த கட்டுப்பாடு பொருந்தாது என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உணவகங்கள், காய்கறி, பழக்கடைகள், ஷோரூம்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இரவு 10.30 மணி வரை மட்டுமே செயல்படலாம். 
திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.