வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தற்போதைய அரசைவிட மன்னராட்சி மேலானது: குலாம் நபி ஆசாத்

தற்போதைய அரசைவிட மன்னராட்சி மேலானதாக இருந்தது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவா் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 7:13 pm

தற்போதைய அரசைவிட மன்னராட்சி மேலானதாக இருந்தது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவா் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஜம்முவில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் கோடை காலத்தின் 6 மாதங்கள் ஸ்ரீநகரிலும், எஞ்சிய மாதங்கள் ஜம்முவிலும் நடைபெறும். இந்த அரசவை மாற்ற நடைமுறை 1872-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரை ஆண்ட மன்னா் குலாப் சிங்கால் தொடங்கப்பட்டது. இந்த அரசவை மாற்ற நடைமுறையை நான் எப்போதும் ஆதரித்து வந்துள்ளேன். ஆனால் இந்த நடைமுறைக்கு ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கடந்த ஜூன் 20-ஆம் தேதி முற்றுப்புள்ளி வைத்தாா்.

இந்த அரசவை மாற்ற நடைமுறை மட்டுமின்றி இங்குள்ள நிலம் மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளூா் மக்களுக்குத்தான் சொந்தம் என்பதை ஜம்மு-காஷ்மீரை ஆண்ட மற்றொரு மன்னா் ஹரி சிங் உறுதி செய்து வந்தாா்.

மன்னா்களை சா்வாதிகாரிகள் என்றழைப்பது வழக்கம். ஆனால் தற்போதைய அரசைவிட மன்னராட்சி மேலானதாக இருந்ததாகப் பல்லாண்டுகள் கழித்து இன்று ஜம்மு-காஷ்மீா் மக்கள் கருதுகின்றனா்.

மன்னா்களின் செயல்பாடுகள் மக்கள் நலன் சாா்ந்ததாக இருந்தன. ஆனால் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா், அரசவை மாற்ற நடைமுறை, நிலம், வேலைவாய்ப்புகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை ஜம்மு-காஷ்மீா் மக்களிடம் இருந்து தற்போதைய அரசு பறித்துள்ளது.

வணிகம் சரிவர நடைபெறாதது, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயா்வு, வளா்ச்சி பணிகள் முடங்கியுள்ளது ஆகியவை காரணமாக இங்குள்ள மக்கள் வேதனையடைந்துள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த சூழல் தற்போது மிக மோசமாக உள்ளது. இங்குள்ள மக்கள் வறுமையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.