புது தில்லி: நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 443.49 லட்சம் டன் நெல்லை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் 95,310 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
இதுதொடா்பாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘2021-22-ஆம் ஆண்டுக்கான காரீஃப் சந்தைப் பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமைவரை தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, பிகாா், சண்டீகா், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து ரூ.86,924 கோடி மதிப்பு கொண்ட 443.49 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 47.03 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ 1,338 கோடி மதிப்பிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 95,310 தமிழக விவசாயிகள் பயனடைந்துள்ளனா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


