ராஜஸ்தானில் இன்று மட்டும் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. இதில் 37 பேர் வரையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநிலத்தில் ஜெய்ப்பூர், உதய்பூர், அஜ்மீர் ஆகிய பகுதிகளில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் 241 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 540 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக தில்லியில் 238 பேருக்கும் மகாராஷ்டிரத்தில் 167 பேருக்கும், குஜராத்தில் 73 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.