வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமளி: 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமளி: 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமளி: 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்
Published on
Updated on
1 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

மாநிலங்களவை ஒன்று (ஜன.3) காலை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த உறுப்பினர்களான சஞ்செய் சிங், என்.டி குப்தா மற்றும் சுஷில் குப்தா ஆகிய மூன்று பேரையும் இடைநீக்கம் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய சுஷில் குப்தா, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்கள்  விவசாயிகளுக்கு பலனளிக்கப்போவதில்லை. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com