ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தில்லி கலவரம்: குழு அமைத்து விசாரிக்க காங். கோரிக்கை

தில்லி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.

News image

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்

Updated On :3 பிப்ரவரி 2021, 9:32 am

தில்லி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். 

குடியரசு நாளன்று ஏற்பட்ட கலவரத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது. செங்கோட்டையில் நடந்த சம்பவமும், தேசியக் கொடிக்கு நிகழ்த்தப்பட்ட அவமதிப்பும், குடியரசுக்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் ஏதிரானது.

குடியரசு நாளன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி மரியாதை செலுத்திய அதே இடத்தில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் அதே வேளையில் விவசாயிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை கைது செய்வதை கைவிட வேண்டும்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பிரதிநிதியாக முன்னிருத்தப்படும் ஒரு நபர் எவ்வாறு தேசதுரோகியாக முடியும். மக்களால் தேர்வு செய்யபட்ட ஒரு எம்.பி. எவ்வாறு தேசத்துரோகியாக முடியும். அவர் தேசத்துரோகி என்றால் நாம் அனைவரும் தேசத்துரோகிதான் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.