பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தில்லியில் நேரடி ஆட்சிக்கு பாஜக முயற்சிக்கிறது: சிசோடியா

தில்லியில் ஆளுநர் மூலம் நேரடி ஆட்சி நடத்த மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

News image
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)
Updated On :4 பிப்ரவரி 2021, 10:28 am

DIN

தில்லியில் ஆளுநர் மூலம் நேரடி ஆட்சி நடத்த மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இது குறித்து பேசிய தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தலைநகரான தில்லியை பின்வாசல் வழியாக ஆட்சி செய்ய மத்திய பாஜக முயற்சிக்கிறது. அதன்பொருட்டு ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இது நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் தில்லி மக்களுக்கு எதிரானது.  தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தேர்தலிலும் பாஜக தோல்வியைத் தழுவி வரும் நிலையில், ஆளுநர் மூலம் பின்வாசல் வழியாக தில்லியை ஆட்சி செய்ய பாஜக முயற்சிக்கிறது என்று அவர் விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.