கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லியில் 2024-க்குள் 25% மின்சார வாகனங்கள்: கேஜரிவால்

தில்லியில் 2024-ஆம் ஆண்டிற்குள் 25 சதவிகித மின்சார வாகனங்கள் பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :4 பிப்ரவரி 2021, 11:02 am

DIN

தில்லியில் 2024-ஆம் ஆண்டிற்குள் 25 சதவிகித மின்சார வாகனங்கள் பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் 'ஸ்விட்ச் தில்லி' இயக்கத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், டெல்லியில் வரும் 2024-ம் ஆண்டுக்குள் 25 சதவிகித அளவிற்கு மின்சார வாகனங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் மாசடைவதை தடுப்பதில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மிக முக்கியமானது. மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. 

மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. மின்சார வாகனங்கள் பயன்பாட்டை இயக்கமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.