கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் ரூ. 34,000 பண மோசடி

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் மர்ம கும்பல் ஒன்று ஆன்லைன் மோசடி நடத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :9 பிப்ரவரி 2021, 5:55 am

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் மர்ம கும்பல் ஒன்று ஆன்லைன் மோசடி நடத்தியுள்ளது. 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகள் ஹர்ஷிதா, பழைய சோபா ஒன்றை ஆன்லைன் மூலமாக விற்பதற்கு பதிவிட்டுள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்து தொடர்பு கொண்ட ஒருவர் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் அனுப்பிய க்யூ. ஆர். கோடை ஸ்கேன் செய்த ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 20,000 மற்றும் ரூ. 14,000 என மொத்தம் ரூ. 34,000 பணம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதையறிந்த ஹர்ஷிதா தில்லி சிவில் லைன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் இதுதொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.