நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லியில் கரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 265ஆக அதிகரிப்பு

தில்லியில் கரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 265ஆக அதிகரிக்கப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 பிப்ரவரி 2021, 3:57 pm

DIN

தில்லியில் கரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 265ஆக அதிகரிக்கப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி மற்றும்  ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தில்லியில் 81 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்ட தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 183ஆக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 82 புதிய கரோனா தடுப்பூசி மையங்களை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தில்லியில் கரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 265ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய மையங்கள் வியாழக்கிழமை முதல் செயல்பாட்டு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.