நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ.338 கோடி மதிப்பிலான கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி: மத்திய அரசு

இதுவரை ரூ.338 கோடி மதிப்பிலான கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

News image

இதுவரை ரூ.338 கோடி மதிப்பிலான கரோன தடுப்பூசிகள் ஏற்றுமதி: மத்திய அரசு

Updated On :12 பிப்ரவரி 2021, 11:34 am

DIN

இதுவரை ரூ.338 கோடி மதிப்பிலான கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா், செஷல்ஸ், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பிப்ரவரி 8ஆம் தேதி நிலவரப்படி இதுவரை ரு.338 கோடி மதிப்பிலான கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதியாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

அவற்றில் ரூ.125.4 கோடி மதிப்பிலான 62.7 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இலவசமாகவும், ரூ.213.32 கோடி மதிப்பிலான 1.05 கோடி கரோனா தடுப்பூசிகள் மானிய விலையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.