டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமர் கோயிலுக்கு நிதி கேட்டு மிரட்டல்: கர்நாடக முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நிதி கேட்டு தான் மிரட்டப்பட்டதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

News image
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி
Updated On :27 ஜனவரி 2024, 7:33 pm

ANI

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நிதி கேட்டு தான் மிரட்டப்பட்டதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமர் கோயிலுக்கு நிதிகேட்டு மக்கள் மிரட்டப்படுவதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரான குமாரசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ஒரு பெண் உட்பட மூன்று பேர் என் வீட்டிற்கு வந்து ராம்ர் கோயிலுக்கு நான் ஏன் நிதி கொடுக்கவில்லை என்று கேட்டு என்னை மிரட்டினர்” எனத் தெரிவித்தார்.

மேலும், “இது நாட்டின் பிரதான பிரச்னை. ராமர் கோயில் கட்டுகிறோம் எனும் பெயரில் மற்றவர்களை அச்சுறுத்தி பணம் சேகரிக்கின்றனர். வசூல் செய்யப்படும் பணத்தை நிர்வகிப்பது குறித்த வெளிப்படைத்தன்மை எங்கே?” என கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.