தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஜம்மு-காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள்: நீதிபதியுடன் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ள வெளிநாட்டு தூதர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை சந்தித்தனர்.

News image
Updated On :18 பிப்ரவரி 2021, 8:29 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ள வெளிநாட்டு தூதர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை சந்தித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இரண்டாவது நாளான இன்று (பிப்.18) ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை நேரில் சந்தித்தனர்.

முதல் நாளான நேற்று தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள், யூனியன் பிரதேசத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் தூதர்கள் பேசினர். 

வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த தூதா்கள் புதன்கிழமை ஜம்மு-காஷ்மீருக்கு வருகை புரிந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளை வெளிநாடுகளின் தூதர்கள் குழு ஆய்வு செய்வது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.