6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திக்கிறது காங்.: அமித் ஷா

தேர்தல் நேரத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி மக்களை நோக்கி வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :25 பிப்ரவரி 2021, 9:41 am

DIN

தேர்தல் நேரத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி மக்களை நோக்கி வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

அசாம் மாநிலம் நாகான் பகுதியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அமித் ஷா, ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்துள்ளன.

அசாம் மாநிலம் போராட்டங்களுக்கும், வன்முறைக்கும் மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், பாஜக ஆட்சி அதனை மாற்றியமைத்தது. அசாம் மாநிலத்திற்கு மோடி செய்த அனைத்தும் பெருமையையே கொண்டுவந்து சேர்த்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் தருண் கோகோயும் அசாம் மாநில வளர்ச்சிக்கு உழைத்தார். அதனால் பிரதமர் மோடி ஆட்சியில் அவருக்கு பம்ப பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. 

தேர்தல் நேரங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி மக்களை சந்திக்கிறது. அவர்கள் தில்லி சாலைகளிலேயே சுற்றிக்கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக மட்டுமே மக்களை சந்திக்கின்றனர். அதுதான் தற்போதும் நடக்கிறது'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.