தேர்தல் நேரத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி மக்களை நோக்கி வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலம் நாகான் பகுதியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அமித் ஷா, ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்துள்ளன.
அசாம் மாநிலம் போராட்டங்களுக்கும், வன்முறைக்கும் மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், பாஜக ஆட்சி அதனை மாற்றியமைத்தது. அசாம் மாநிலத்திற்கு மோடி செய்த அனைத்தும் பெருமையையே கொண்டுவந்து சேர்த்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் தருண் கோகோயும் அசாம் மாநில வளர்ச்சிக்கு உழைத்தார். அதனால் பிரதமர் மோடி ஆட்சியில் அவருக்கு பம்ப பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நேரங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி மக்களை சந்திக்கிறது. அவர்கள் தில்லி சாலைகளிலேயே சுற்றிக்கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக மட்டுமே மக்களை சந்திக்கின்றனர். அதுதான் தற்போதும் நடக்கிறது'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


